காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (53). தனியார் பள்ளி வாகன டிரைவர். அவர் சனிக்கிழமை புதுப்பேட்டையில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த உத்ரமேரூர் சாலையில் உள்ள காவந்தண்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது களக்காட்டூர் கூட்டு சாலை அருகே, எதிரே ஒரு சைக்கிள் வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளைத் திருப்பிய போது நிலை தடுமாறி அர்ஜுனன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மாகரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கலைத்திறனில் அசத்தல்!
பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...
கயாக் படகில் 60 கி.மீ. கடற்பயணம்!

தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆசை: ஜான்வி கபூர்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


