மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...

'நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நாங்கள் பொருள்களைக் கொண்டு வர உங்களோடு வருகிறோம்'' என்று விளம்பர வாக்கியத்துடன் செயல்படும் தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

News image
Updated On :31 மே 2026, 1:14 pm IST

'நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நாங்கள் பொருள்களைக் கொண்டு வர உங்களோடு வருகிறோம்'' என்று விளம்பர வாக்கியத்துடன் செயல்படும் தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.'கேரிமேன்' எனும் இந்த வசதியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் பெட்டிகளுடன் பயணிகள் இறங்கியவுடன் அவர்களை போர்ட்டர்கள் சூழ்வார்கள். அதுபோல், ஷாப்பிங் செய்யும்போது, வாங்கிய பொருள்களை வாகனங்களில் ஏற்ற பொருள்களை டிராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருவதும் சிரமமான வேலையாகும். அதனால் மால்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கும் பொருள்களை வாகனங்கள் நிற்கும் இடம் வரை கொண்டு செல்ல 'கேரிமேன்' வசதியை 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் ஒன்று தில்லியில் தொடங்கியுள்ளது.

நமக்கு பொருள்களைத் தூக்க அல்லது தள்ள உதவி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்தில் சொன்னால் போதும், உதவிக்கு ஒரு ஆளை அனுப்பிவைப்பார்கள்.

'மக்கள் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். ஆனால், பொருள்களை உரிய இடத்துக்குக் கொண்டு வருவதில் உடல் ரீதியான சிரமத்தை மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். ஷாப்பிங் பொருள்களைக் கொண்டு வருவதில் உள்ள பிரச்னைகளுக்கு விடுதலை தரவே 'கேரிமேன்' வசதியை அறிமுகப்படுத்தினோம்.

வாங்கிய பொருள்களைக் கையாளுவதற்கு மணி ஒன்றக்கு ரூ.149 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூக்கிச் செல்ல வேண்டிய ஷாப்பிங் தொடக்கத்திலிருந்தே 'கேரிமேன்' உடனிருப்பார். இந்த உதவியாளர், ஷாப்பிங் பைகளைச் சுமக்கவும், கடைகளுக்கு வழிகாட்டவும், உணவு வரிசைகளில் காத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அல்லது மெட்ரோ வாயில்கள் வரை பொருள்களைக் கொண்டு வந்து தருவதற்கும் உதவுவார். ஒரு கேரிமேன் 12 கிலோ எடையுள்ள பொருள்களைத் தூக்கலாம். இதற்கு அதிகமான பொருள்களைத் தூக்க இன்னொரு கேரிமேனை வாடகைக்கு அழைக்கவேண்டும்'' என்கின்றனர் அந்த நிறுவனத்தினர்.

-சக்ரவர்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.