யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பல்கலை.க்கு மாணவர்கள் அனுப்பும் டி.டி.யை முறைகேடாக விற்று காசு பார்த்தவர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அனுப்பும் வரைவோலை(டி.டி.,)யை முறைகேடாக விற்று காசுபார்த்த தொகுப்பூதியப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :28 ஜூன் 2013, 6:54 am

தங்கராஜா

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அனுப்பும் வரைவோலை(டி.டி.,)யை முறைகேடாக விற்று காசுபார்த்த தொகுப்பூதியப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.

பல்கலை.க்கு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட விண்ணப்பங்களை அனுப்பும் மாணவர்களின் விண்ணப்பத்தில் இருந்து டி.டி.யை தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றை வைத்துக்  கொண்டுள்ளார் வெங்கடேசன். தொகுப்பூதியப் பணியாளரான இவர் எடப்பாடி அருகே உள்ள ராக்கிப் பட்டியைச் சேர்ந்தவர்.

பின்னர் அவசர அவசரமாக டி.டி. எடுக்காமல் பல்கலை.க்கு விண்ணப்பத்துடன் வரும் மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்த டி.டி.யை அவர் கொடுத்து விடுவாராம். இவ்வாறு பண முறைகேட்டில் இவர் ஈடுபடுவதாக பல்கலை. பதிவாளர் அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீஸார் வழக்கு பதிந்து, வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.