தருமபுரி அருகே கல்லூரிப் பேருந்துகள் மோதி விபத்து: 4 மாணவிகள் பலி
தருமபுரி அருகே இரு கல்லூரிப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில், 4 மாணவிகள் பலியாயினர்.


தருமபுரி அருகே இரு கல்லூரிப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில், 4 மாணவிகள் பலியாயினர்.
தருமபுரி அருகே நல்லானூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பேருந்தும், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேருந்தும்
வழக்கம்போல், மாணவியரை ஏற்றிக் கொண்டு சென்றன. இருகல்லூரிப் பேருந்துகளும் தருமபுரி பென்னாகரம் சாலையில் மல்லாபுரம் என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவி பலியானார். 25க்கும் மேற்பட்ட மாணவியர் காயமடைந்தனர். அவர்கள் தருமபுரி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஸ்ரீதேவி, காயத்ரி, பானு ஆகிய மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
மருத்துவமனை வளாகம் மாணவர்களால் சூழப்பட்டுள்ளது. சக மாணவியரின் மரணம் அங்கே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...