வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து சிதம்பரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை குமாரமங்கலம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரமங்கலம் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கீடு செய்ய வந்த வேளாண் அதிகாரி செல்வராஜ் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிடாமல் நன்றாக விளைச்சல் பெற்ற நிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.2500 பணம் பெற்றுக் கொண்டு ஒரு தலைபட்சமாக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே உடனடியாக முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவிஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே ஹோட்டல்கள்! மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கச் செயலாளர்!
மீண்டும் படத்தில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

