ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேட்டு முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (38). இவருக்கும் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரதம் மகன் ராமர் என்பவருக்கும் திருணம் நடைபெற்று 5 பிள்ளைகள் உண்டு. மூத்த மகள் சுரேகா (19), தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற ராமர், தனது மனைவியை நீ பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று கூறி தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து மூன்று ஆண்டுகளாக நல்லம்மாள் மேட்டு முள்ளிக்குளத்தில் பிள்ளைகளுடன் குடியிருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று நல்லம்மாள் வீட்டிற்கு ராமர் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகாறில் மனைவி நல்லம்மாளை ராமர் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்கச் சென்ற மகன் ரமேஷ் (18) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் நல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமரை தேடி வருகிறார்கள்.