மேலும் விடுதி அறையில் வெறும் தரையில் படுத்திருந்த +2 மாணவர்கள் 65 பேருக்கு உடனடியாக பாய் மற்றும் தலையணைக்கள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது அரசு ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் விடுதிக்காக கோடிக்கணக்காக செலவிடுகிறது. ஆனால் அதனை சரியாக செலவிட்டு செயல்படுத்துவதில்லை என அதிகாரிகளை கடிந்து கொண்டார். ஆய்வின் போது அரசு செயலருடன் கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் ஹரிநாராயணன், பொறியாளர் திருநாவுக்கரசு, தனி வட்டாட்சியர் குணசேகரன், விடுதி வார்டன் பெருஞ்சித்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.