தருமபுரி அருகே தனியார் பஸ் மோதி ஆசிரியை பலி; 20 பேர் காயம்
தருமபுரி அருகே பாலக்கோடு சாலையில் உள்ள தடங்கம்பட்டி என்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியை பலியானார்.


தருமபுரி அருகே பாலக்கோடு சாலையில் உள்ள தடங்கம்பட்டி என்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியை பலியானார்.
கொல்லன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஜோதி (30) வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பள்ளி உள்ள சாலையில் திரும்பும்போது, தருமபுரியில் இருந்து பாலகோடு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, அவர் மீது மோதியது. இதில், ஆசிரியை ஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆசிரியை மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...