ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தருமபுரி அருகே தனியார் பஸ் மோதி ஆசிரியை பலி; 20 பேர் காயம்

தருமபுரி அருகே பாலக்கோடு சாலையில் உள்ள தடங்கம்பட்டி என்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியை பலியானார்.

News image
Updated On :9 மார்ச் 2013, 5:08 am

முருகன்

தருமபுரி அருகே பாலக்கோடு சாலையில் உள்ள தடங்கம்பட்டி என்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியை பலியானார்.

கொல்லன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஜோதி (30) வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பள்ளி உள்ள சாலையில் திரும்பும்போது, தருமபுரியில் இருந்து பாலகோடு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, அவர் மீது மோதியது. இதில், ஆசிரியை ஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆசிரியை மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.