தமிழகத்தில் உள்ள அனைத்து குல தெய்வ கோயில்களிலும் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று, மாசிப்படைப்பு திருவிழாவை கொண்டாடுவது வழக்கமாக இருந்தாலும், ஒரு கோயிலுக்கு குறைந்தது 100 குடும்பத்தார் முதல் அதிகபட்சமாக 500 குடும்பத்தார் வரை தான் அந்த குறிப்பிட்ட தெய்வத்தை குல தெய்வ வழிபாடு செய்வார்கள். ஆனால் தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் தான் 1200-க்கும் மேற்பட்ட குடும்பத்தார், ஒரே வழி உறவுக்காரர்களாக வந்து மகா சிவராத்திரி அன்று சுவாமி கும்பிடுகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டிற்கு அருப்புக்கோட்டை, எஸ்.ராமச்சந்திராபுரம், சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, சத்திரப்பட்டி, ராஜபாளையம், மதுரை, டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள குடும்பத்தினர் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மகா சிவராத்திரி அன்று பத்திரகாளியம்மன் கோயிலுக்கு ரூ.70 செலுத்தி, பிரசாசம் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார். இந்த விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் மாநிலத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.