மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காவல்நிலையம் முன்பு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் கைது

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (27). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில்

News image
Updated On :13 மார்ச் 2013, 12:48 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் காவல் நிலையம் முன்பு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சிறப்பு காவல்படை காவலர் ஒருவரை போலீஸார்  நேற்று இரவு கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (27). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றுகிறார். சொந்த ஊருக்கு வந்த காவலர் தமிழ்ச்செல்வன் நேற்று(செவ்வாய்க்கிழமை) குடிபோதையில் காட்டுமன்னார் கோயில் காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அதனை பெண் போலீஸ்காரர் ஒருவர் தட்டிக்கேட்டபோது அவரை ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனையும் திட்டியுள்ளார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் சிறப்பு காவல்படை காவலர் தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.