இதனையடுத்து பல்கலைக்கழக செனட் ஹாலில் புதன்கிழமை சிறப்பு செனட் கூட்டம் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில் உயர்கல்வித்துறை அரசு செயலர், நிதித்துறை செயலர் ஆகியோரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்து அவர்களது ஆலோசனையும், ஒப்புதலையும் பெற வேண்டும் என்றார். சிறப்பு பிரதிநிதியாக கூட்டத்தில் பங்கேற்ற சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் பேசுகையில் அரசு செயலர் அபூர்வவர்மா தெரிவித்துள்ள நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பின்னர் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் கொண்ட கமிட்டி அமைத்து டெண்டர் விடும்போது அந்த கமிட்டி ஒப்புதல் பெற வேண்டும் என துணைவேந்தர் தாண்டவன் குறிப்பிட்டார்.