சிதம்பரம் அருகே விளை நிலத்தில் புகுந்த 8 அடி நீள முதலையை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள தெற்குசாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு. இவருக்கு சொந்தமான நிலத்தில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வயலில் 8 அடி நீளமுள்ள முதலை படுத்திருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பிடித்து மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அருகாமையில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் முதலை புகுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் அக்கிராமத்திற்கு சென்று முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி நீர்தேக்கத்தில் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
துபையிலிருந்து சென்னை வந்த அஜித்!

கச்சா எண்ணெய் விலை சரிவால் மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை!
ஹேப்பி ராஜ் இரண்டாவது பாடல் வெளியீடு!
ஈரான்: நகரங்களில் இன்னும் இருந்தால் செத்து மடிவோம்..! கிராமங்களுக்கு இடம்பெயரும் மக்கள்!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

