விருதுநகர் அருகே தொழிற்சாலையில் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் பாய்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பி்ல் கூறியதாவது: விருதுநகர் அருகே பெரிய பேராலி சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருள்கள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அருப்புக்கோட்டை அருகே திருநகரத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் முத்துவீரன்(19) வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணி செய்வதற்கு ஆலைக்கு வந்தார். அங்குள்ள மோட்டாரை இயக்கும் போது வயரில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இதில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சையளித்தும், பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் தம்பி முத்துக்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் எலெக்ட்ரிசியன் வசந்தகுமார், மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

