ராமதாஸ் ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனு தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து பதில் மனு தக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கோரப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி  சிவக்குமார் இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். பாமக சார்பில் மாநில சட்டப் பாதுகாப்பு குழுத் தலைவர் கே.பாலு ஆஜரானார். ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்தும், சென்ற ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் பேசியதன் பேரிலும், இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பேசியதன் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருக்கழுக்குன்றம் போலீஸார் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நாளைக்க்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com