விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே இன்று மாலையில் மழையை அடுத்து ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணன்(20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர் கிராமத்தில் விடுமுறை நாளை கழிப்பதற்காக உறவினரான மணிகண்டன்(29) என்பவரின் வீட்டிற்கு இன்று காலையில் வந்துள்ளார்.இதையடுத்து, மாலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு கண்மாய்கரை வழியாக வீ்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென் மழை பெய்ததை அடுத்து ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கியதில் கிருஷ்ணன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக தளவாய்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

