கடலூர் மாவட்டத்தில் மேலும் 11 கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி்குறிப்பில்.
வெளிச்சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு சங்கங்களின் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஏற்கனவே நெய்வேலி டவுன்ஷிப்பில் இரண்டு கடைகளிலும், கடலூரில் ஒரு கடையிலும், கூட்டுறவுத்துறை மூலம் கடலூரில் ஒரு கடையிலும், விருத்தாசலத்தில் இரு கடைகளிலும், நெய்வேலி டவுன்ஷிப்பில் 4 கடைகளிலும் ஆக மொத்தம் 7 கடைகளில் ரூ. 20க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு துறை மூலம் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், வசந்தராயன்பாளையம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் சிஎம்எஸ் கடைகளிலும், பெண்ணாடம் கூட்டுறவு ரேஷன் கடை, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கும் கடைகளிலும், மங்கலம்பேட்டை கூட்டுறவுத்துறை வளாகத்திலும் அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரமான அரிசியை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

