மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள்: கடலூரில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்துக்கு தடை

கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

Updated On :18 மே 2013, 4:09 am

கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள மஞ்சை நகர் திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படங்களுடன் சீமான் படங்களும் அச்சிடப்பட்டு, பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன.

தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர் படத்துடன் போஸ்டர்கள் ஒட்ட ஏற்கெனவே அரசாணை உள்ள நிலையில், இது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படங்களை நாம் தமிழர் கட்சியினர் நீக்கவில்லை. எனவே, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிப்பதாக மாவட்ட எஸ்பி ராதிகா அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திலீபன் வீட்டுக்குச் சென்று போலீஸார் இன்று அதிகாலை 3 மணி அளவில் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத நிலையில், அவர் வீட்டின் கதவில் இந்த அறிவிப்பை ஒட்டிவிட்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.