ராஜீவ்காந்தியின் 22ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள இராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் தமிழ்நாடு கங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இராஜீவ்காந்தியின் 22ம் ஆண்டு நினைவு தினயொட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா, பாக்கிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித்சிங்கின் சகோதரி தல்பிர்கவுர், அவரது மகள் சுவப்பனாதீப், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்பிக்கள் ஜே.எம்.ஆரூண், விஸ்வநாதன், மானிக்தூகூர், ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா, வசந்தகுமார், செல்வபெருந்தகை, இராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி,வட்டார காங்கிரஸ் தலைவர் வேலு, நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.