இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாலைத் தடுப்புச் சுவரில் மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு

தேனியில் தேனி-மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார்.

Updated On :22 மே 2013, 11:31 am

தேனியில் தேனி-மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார்.

கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயக்குமார்(32), இதே ஊரைச் சேர்ந்த தர்மர்(48) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோடங்கிப்பட்டியில் இருந்து கருவேல்நாயக்கன்பட்டி நோக்கிச் சென்றனர். வாகனத்தை ஜெயக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். தேனி-மதுரை சாலையில் தனியார் பள்ளி அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். தர்மர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.