இலவச மனைப்பட்டா வழங்க இருளர் இன மக்கள் கோரிக்கை

அண்ணாகிராமம் ஒன்றியம் அகரம் கிராமத்தை சேர்ந்த 21 இருளர் குடும்பத்தினர், புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க மாவட்ட தலைவர் பாவா தலைமையில், கடலூரில் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் அண்மையில் அளித்த மனுவில்:-  அண்ணாகிராம பகுதிகளில் இருளர்
Updated on
1 min read

குடியிருப்புக்கு இலவச மனைபட்டா வழங்கி, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணாகிராமம் ஒன்றியம் அகரம் கிராமத்தை சேர்ந்த 21 இருளர் குடும்பத்தினர், புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க மாவட்ட தலைவர் பாவா தலைமையில், கடலூரில் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் அண்மையில் அளித்த மனுவில்:-  அண்ணாகிராம பகுதிகளில் இருளர் குடும்பத்தினர் மனைப்பட்டா இல்லாமல் சாலையோர குடிசைகளில் வசித்து வருகிறோம். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதில்லை.

மேலும் எங்கள் குழந்தைகள் கல்விச்சலுகைபெற சாதி சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறோம். எனவே இருளர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள், வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com