சமச்சீர் பாடம் அமல்படுத்தப்பட்ட பின் தனியார் பள்ளிகள் மெட்ரிக் என்ற பெயரை பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க மாநாடு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில், உயர் கல்வியில் முன்னுரிமை வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். மழலையர் பள்ளி முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முழுவதும் அரசு பொறுப்பில் அனைவருக்கும் தரமாக வழங்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட மாணவர்கள் சமத்துவத்திற்கான பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறையை அமல்படுத்த உரிய சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கையெடுக் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் பாடம் அமல்படுத்தப்பட்ட பின் தனியார் பள்ளிகள் மெட்ரிக் என்ற பெயரை பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

