ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே மோதல்: நால்வர் காயம்; மூவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்-இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.







