விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே மோதல்: நால்வர் காயம்; மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்-இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Updated On :4 நவம்பர் 2013, 12:02 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் - இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - இந்திராநகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ராஜசேகர் (21). இவரது தரப்பினருக்கும் இந்திராநகர் - பாண்டியன்நகரைச் சேர்ந்த செல்வம் மகன் முருகேசன் என்பவர் தரப்பிற்கும் இங்குள்ள கோயில் பொங்கல் விழாவின் போது விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் மகள் விஜயபாலா (23), து.ரவிச்சந்திரன் (55), ராஜசேகர் (21), தங்கராஜ் மனைவி கோகிலா (45) ஆகியோரை செல்வம் மகன் முருகேசன், வன்னியம்பட்டி கோவிந்தராஜ் மகன் வைரமுத்து, பாண்டியன்நகர் கருப்பையன் மகன் முருகேசன் ஆகியோர் சேர்ந்து சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார்களாம். இதில் நால்வரும் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக ராஜசேகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் செ.முருகேசன், கோ.வைரமுத்து, க.முருகேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் இதுபோன்று இரு தரப்பினரும் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப் பகுதியில் வேற்று சமுதாயத்தினரிடையே மோதல் சம்பவங்கள் தொடர்வது இப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.