சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே மோதல்: நால்வர் காயம்; மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்-இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:36 pm

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் - இந்திராநகரில் தொடர்ந்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். புகாரின் பேரில் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - இந்திராநகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ராஜசேகர் (21). இவரது தரப்பினருக்கும் இந்திராநகர் - பாண்டியன்நகரைச் சேர்ந்த செல்வம் மகன் முருகேசன் என்பவர் தரப்பிற்கும் இங்குள்ள கோயில் பொங்கல் விழாவின் போது விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் மகள் விஜயபாலா (23), து.ரவிச்சந்திரன் (55), ராஜசேகர் (21), தங்கராஜ் மனைவி கோகிலா (45) ஆகியோரை செல்வம் மகன் முருகேசன், வன்னியம்பட்டி கோவிந்தராஜ் மகன் வைரமுத்து, பாண்டியன்நகர் கருப்பையன் மகன் முருகேசன் ஆகியோர் சேர்ந்து சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார்களாம். இதில் நால்வரும் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக ராஜசேகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் செ.முருகேசன், கோ.வைரமுத்து, க.முருகேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் இதுபோன்று இரு தரப்பினரும் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப் பகுதியில் வேற்று சமுதாயத்தினரிடையே மோதல் சம்பவங்கள் தொடர்வது இப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.