தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மிக மோசமான நிலையில் பண்ருட்டி காவல் நிலையம்

பண்ருட்டியில் திருவதிகையில் 15.5.1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1949ல், பண்ருட்டியில் உள்ள அரசு இடத்தில் மாற்றப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2013, 6:47 am

சீனிவாசன்

பண்ருட்டியில் திருவதிகையில் 15.5.1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1949ல், பண்ருட்டியில் உள்ள அரசு இடத்தில் மாற்றப்பட்டது.

சாய் கிராமம் 15, குக் கிராமங்கள் 27, நகராட்சி வார்டு 33, ஆகியவை இந்த காவல்நிலையத்துக்கு உட்பட்டு உள்ளது. 1949ல் ஓடு வேய்ந்த கட்டடத்தில் இயங்கி வரும் இந்த காவல்நிலையம், மிக மோசமான நிலையில் சிதிலமடைந்து லேசான மழைக்குக் கூட ஒழுகும் நிலையில் உள்ளது. இதனால், காவலர்கள், ஆய்வாளர்கள் அமர்ந்து பணி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக் காலத்தில் அதில் உள்ள வாரைகள், ஓடுகள் பலவீனமடைந்து உள்ளதாலும், சுவர்கள் ஈரப்பதம் ஏறி ஊறி இருப்பதாலும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

இதனால் இங்கு உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனை வேறு கட்டடத்துக்கு மாற்ற காவல்துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.