சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அரசு மதுபானக் கடையில் ரூ.4.22 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டதாகப் புகார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோவிலூரில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை

Updated On :6 நவம்பர் 2013, 10:28 am

அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடையில், விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை செலுத்தாமல் விற்பனையாளர் கையாடல் செய்ததாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோவிலூரில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை அரசுக் கணக்கில் விற்பனையாளர் அன்பழகன் என்பவர் செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் கோபிநாத் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.