தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் புறவழிச்சாலையில் மாணவியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் ஜோதி (16). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில்

News image
Updated On :9 நவம்பர் 2013, 9:36 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் ஜோதி (16). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் கல்லூரியிலுருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு மோட்டார் சைக்கிள்கள் வந்த மர்மநபர்கள் வழிமறித்து கழுத்திலிருந்த 2 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரத்தை பறித்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.