ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத்

News image
Updated On :15 நவம்பர் 2013, 12:21 pm

சங்கர்

நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை மாலை ஏற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. திடீர்க் காற்றுடன் மழை பெய்யக் கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் உள்ளூர் முன்னறிவிப்பாக இந்தக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.