தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் கடும் பனி பொழிவு! ஐயப்ப பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த கடும் பனிபொழிவினால் ஐயப்ப பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

News image
Updated On :17 நவம்பர் 2013, 8:07 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த கடும் பனிபொழிவினால் ஐயப்ப பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

கார்த்திகை 1-ம் தேதி என்பதால் ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரத்தத்தை தொடங்கும் நாளாகும். இந்நிலையில் சிதம்பரம் நகரில் கார்த்திகை 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் எதிரே வருபவர்கள் தெரியவில்லை. பஸ், லாரி மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மஞ்சல் லைட்டும், முகப்பு லைட்டும் போட்டுதான் வாகனம் ஓட்டினர். மேலும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் கடும் பணியிலும், குளிரிலும் சில்லென்ற நீரி்ல் குளித்துவிட்டு கடும் அவதியுடன் கோயிலுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.