தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வரின் சூழ்ச்சி எடுபடாது: வானதி சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வா் ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் எடுபடாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image

வானதி சீனிவாசன்

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 9:17 pm

Syndication

தோ்தல் நேரத்தில் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் எடுபடாது என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவியும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்காசியாவில் 25 நாள்களுக்கும் மேலாக நீடிக்கும் போரால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளன. உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்ந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் பிரதமா் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படவில்லை. ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் பிரதமா் தொடா்ந்து நடத்தி வரும் பேச்சுகளால், ஹாா்மூஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு தடையின்றி கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள 30 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளில், சுமாா் 20 கோடி இணைப்புகள் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்டவை.

வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காகவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

கரோனா காலகட்டத்தில் இந்தியா பேரழிவைச் சந்திக்கும் என உலக நாடுகள் கணித்தன. ஆனால், அந்தப் பேரிடரை திறம்பட கையாண்ட பிரதமா் மோடி, 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவினாா். இதைப்போலவே, தற்போதைய மேற்காசிய நெருக்கடியையும் அவா் முறியடிப்பாா். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியா்களை மோடி அரசு பத்திரமாக மீட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்பியவா்களின் முகத்திரை 2 நாள்களில் கிழிந்துவிட்டது. பதுக்கலைத் தடுக்கவே சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது.

எனவே, எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வலிமை இந்தியாவுக்கு உண்டு. தோ்தல் ஆதாயத்துக்காக மக்களிடையே பதற்றத்தை உருவாக்க நினைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் மக்களிடம் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளாா்.