தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருதி புவனகிரி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு

News image
Updated On :18 நவம்பர் 2013, 10:01 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருதி புவனகிரி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைவர் டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஜே.வேல்முருகன், துணைச் செயலாளர் டி.ராமமூர்த்தி, துணைத்தலைவர் எஸ்.முருகன், பொருளாளர் ஏ.உமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.பி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.முத்துக்குமரன், டி,ரவிச்சந்திரன், எஸ்.காசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.