தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதை பாதிக்கும் அபாயம்: அச்சத்தில் கிராம மக்கள்

சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து திசைமாறி திரும்பியதால் அருகாமையில் உள்ள விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான அகல ரயில்பாதை பாதிக்கும் அபாயம்

News image
Updated On :19 நவம்பர் 2013, 12:13 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து திசைமாறி திரும்பியதால் அருகாமையில் உள்ள விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான அகல ரயில்பாதை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே மடுவங்கரை எனுமிடத்தில் ரயில்பாதையிலிருந்து 1915-ல் 1400 மீட்டர் தூரம் இருந்தது. பின்னர் 1930-ல் 600 மீட்டர் தூரமானது. 1970-ல் 30 மீட்டரும், 2005-ல் 3.5 தூரமானது. தற்போது வெள்ளாறு அரிப்பெடுத்து திசை மாறி ரயில்பாதை மிக அருகே நெருங்கியுள்ளது. இதனை தடுக்காவிடில் மயிலாடுதுறை- விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

வெள்ளாற்றின் அரிப்பினை தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக ரூ.92 லட்சம் செலவில் பனமரத்தடுப்பு மற்றும் மணல் மூட்டைகள் அமைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது அத்தடுப்புகளும் வெளாற்றின் அரிப்பில் சேதமுற்றதால் கடந்த சில தினங்களாக மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் நிரந்தரமாக இதற்கு தீர்வு இல்லையெனில், மீண்டும் வெள்ளாற்றில் ஒரு வெள்ளம் வந்தால் ரயில்பாதை அடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்படும். ரயில்பாதை மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீர் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.