பஸ் நிலையத்திலிருந்து தில்லைஅம்மன் கோயிலுக்கு செல்ல ரூ.60-ம், அம்மாப்பேட்டை செல்ல ரூ.60-ம், ஓமக்குளம் செல்ல ரூ.70-ம், பச்சையப்பன் பள்ளி சந்திப்பிற்கு செல்ல ரூ.60-ம் வசூலிக்கப்படுகிறது. சிதம்பரம் நகரிலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல ரூ.60 வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளும், பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வட்டார போக்குவரத்து துறையினர் சென்னை நகரில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு அரசு நிர்ணயித்த புதிய கட்டணம் வசூலிக்கப்படுவது போல் சிதம்பரம் நகரிலும் செயல்படுத்த வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.