தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 50 வரை உயர்த்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்றவர்களுக்கு 35 ஆகவும் உள்ளது. குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை. கடந்த 13 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இந்தத் தேர்வு நடந்துள்ளது. எனவே, வயது மூப்பின் காரணமாக கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவு ஆண்களுக்கு 40 ஆகவும், பெண்களுக்கு 45 ஆகவும், மற்றவர்களில் ஆண்களுக்கு 45 ஆகவும், பெண்களுக்கு 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுபோல தமிழகத்திலும் வயது வரம்பை உயர்த்தி கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

