தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாணவி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்-போலீஸார் மீது கல் வீச்சு

பண்ருட்டி வட்டம் வடக்கு பாளையம் கிராமத்தை விவசாயி கணேசன் என்பவரது மகள் மாலதி(18) களளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி பள்ளியில் +2 படித்துவந்த அவர்,இன்று பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு

News image
Updated On :22 நவம்பர் 2013, 1:42 pm

சீனிவாசன்

பண்ருட்டி வட்டம் வடக்கு பாளையம் கிராமத்தை விவசாயி கணேசன் என்பவரது மகள் மாலதி(18) களளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி பள்ளியில் +2 படித்துவந்த அவர்,இன்று பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. தகவலறிந்த உறவினர்கள் பண்ருட்டி- கடலூர் சாலையில் அண்ணா கிராம பஸ்  நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து  பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் மாணவியின் உறவினர்களுக்கும் போலீஸாருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.இதனை கண்டு ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் போலீஸார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் மாணவியிடம் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திவந்ததால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.