தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அதிமுக அரசு குறை கூறி வருகிறது.இப்படிக் குறை நேரத்தில் கூறும் நேரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்காக ஒதுக்கும் நிதியையாவது முறையாகச் செலவிட முன் வரவேண்டாமா நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் சென்னை மண்டல தலைமைப் பொது மேலாளர் ஐ.ஜி.ரெட்டி, தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கி உள்ளன என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.இதே குற்றச்சாட்டினை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.