கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார், சென்னை தெற்கு மத்திய புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி.யான ஏ.வி. மதி, சேலம் மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ச. பெரியசாமி, ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆர். தேவராஜ் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும்.2014-ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் இந்த பதக்கங்களுடன் ரூ. 20 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

