/

திருச்சியில் பெண் சிறைக் கைதி மரணம்; விசாரணைக்கு உத்தரவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் மோர்பள்ளம் என்ற இடத்தில் ரெங்காதெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி பாண்டியம்மாள் (42). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 3ம் தேதி திருச்சி

News image
Updated On :2 அக்டோபர் 2013, 10:19 am

சண்முகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் மோர்பள்ளம் என்ற இடத்தில் ரெங்காதெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி பாண்டியம்மாள் (42). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 3ம் தேதி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இவரது உடல் நிலை பலவீனமாக இருந்ததாகக் கூறி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளர். இது குறித்து உதவி ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.