இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவிலி.யில் வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி: ஒருவர் மீது வழக்கு

அதனை ஓட்டி வந்த தங்கமாரி, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி, காளிதாஸை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:03 pm

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருடி வந்த டிராக்டரை நிறுத்த முயன்ற வருவாய் ஆய்வாளரை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

மல்லி வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் (45), திருவண்ணாமலை நடைபாதை ஓடை மயானம் அருகே தனது குழுவினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்த வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் முற்பட்டுள்ளார். அதனை ஓட்டி வந்த தங்கமாரி, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி, காளிதாஸை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அவர் சற்று ஒதுங்கிக் கொண்டதால் உயிர் பிழைத்தார். இது குறித்து காளிதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கமாரியையும், டிராக்டரையும் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.