சாத்தூர் அருகே முறையான குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட ஏழாயிரம்பண்னை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 15ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மானூர் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கபட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர்,ஒரு வாரத்திற்க்கு ஒரு முறை ஒரு குடம் மட்டும் வழங்கபடுவதாக கூறப்படுகிறது,ஆனால் தற்போது அந்த குடிநீர் நிறுத்தபட்டுள்ளது.இந்நிலையில் இப்பகுதி மக்கள் ஒரு குடம் 10 ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஏழாயிரம்பண்னை மற்றும் பழைய ஏழாயிரம்பண்னையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் ஏழாயிரம்பண்னை-சாத்தூர் சாலையில் அமர்ந்து தீடீர் மறியலில் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்க்கு பின்னர் ஏழாயிரம்பண்னை போலீஸார் மற்றும் சாத்தூர் வட்டாட்சியர் அன்னலட்சுமி,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையில் முறையான குடிநீர் வழங்கபடும் என்று உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

