இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் : கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:10 pm

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம்-நரையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைராஜ் (40). இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும் மகன்களும் உண்டு. 11.9.2008 அன்று சோலைராஜ், ஊர் நாட்டாமை முனியாண்டியிடம் புரட்டாசி பொங்கல் வரி வசூல் தொடர்பாக பேசிக் கொண்டிருந்துள்ளார். கடந்த ஆண்டு வெளியூரில் இருந்து வந்து இங்கு குடியிருந்து வருபவர்களிடம் வரி வசூல் செய்யவில்லை என்றும், இந்த ஆண்டு அப்படி இல்லாமல் எல்லாரிடமும் பொங்கலுக்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் சோலைராஜ் கூறியுள்ளார்.

அப்போது அருகில் இருந்த பொய்ப்புலி (எ) முனியாண்டி (35) என்பவர், சோலைராஜ் இவ்வாறு கூறியது தொடர்பாக தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் பொய்ப்புலி (எ) முனியாண்டி, சோலைராஜை வெட்டியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோலைராஜ் சிகிச்சை பலனின்றி 12.9.2008-ம் தேதி உயிரிழந்தார்.

மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பொய்புலி (எ) முனியாண்டியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.ஆவடி தியாகராஜமூர்த்தி, பொய்புலி (எ) முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.