இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் : சேதமுற்ற சத்துணவுக் கூட கட்டடம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தச்சகுடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சத்துணவுக் கூடம் கட்டித் தர அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:10 pm

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தச்சகுடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சத்துணவுக் கூடம் கட்டித் தர அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தச்சகுடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கு 15 மாணவர்களும் 12 மாணவிகளும் சத்துணவு சாப்பிடுகிறார்கள். இந்த சமையல் கூடம் மிகவும் சேதமுற்று சமையல் செய்யும் போது மேற்கூரை இடிந்து உணவுப் பொருட்களில் விழும் அவல நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவி ராஜகுமாரி பொன்னுச்சாமி புதன்கிழமை கூறியதாவது: பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன். கடந்த ஆண்டு மராமத்து பணி என்று சொல்லி சில இடங்களை பூசி விட்டு சென்று விட்டார்கள். தற்போது மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர் இடிந்து அவ்வப்போது விழுவதால், பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் தச்சகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய சத்துணவுக் கூடம் கட்டிக் கொடுத்து மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.