ஸ்ரீவில்லிபுத்தூர் : சேதமுற்ற சத்துணவுக் கூட கட்டடம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தச்சகுடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சத்துணவுக் கூடம் கட்டித் தர அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








