கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: தனியார் நிர்வாகத்தின் பிடியில் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது. பல வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சமூகசேவையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை உருவாக்கிய பல்கலைக்கழகம். 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் சிறைவாசம் இருந்த கம்யூ கட்சி மூத்த தலைவர் உமாநாத், மூத்த தலைவர் முத்தையா ஆகியோர் இப்பல்கலையில் படித்தவர்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இங்கு கல்வி கொள்ளையடிக்கப்படும் நிலை மாறியதுதான் வருத்தம். இதனை தொடர்ந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பல்வேறு நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த கால ஆட்சிகளில் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது கோரிக்கை ஏற்று வெள்ளைக்காரன் உருவாக்கிய பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த அதிமுக அரசை மனதார பாராட்டுகிறேன். ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியாகும்.