சிவகங்கை, அரசுப் பள்ளி கம்ப்யூட்டர் அறையை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான லேப்டாப்களை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை-மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு வழங்குவதற்காக, அரசு சார்பில் 292 விலையில்லா லேப்டாப்கள் அனுப்பப்ட்டிருந்தது. இதில் கடந்த அக்.12 ஆம் தேதி 264 லேப்டாப்களை மாணவியருக்கு வழங்கி உள்ளனர். மீதமுள்ள 28 லேப்டாப்களை பள்ளியின் கம்ப்யூட்டர் அறையில், வைத்து பூட்டப்பட்டது. இதையறிந்த யாரோ, அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்களை திருடிச் சென்றுவிட்டனராம். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை பள்ளி தலைமை ஆசிரியர் அய்யங்காளை கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

