இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் தமிழக அரசின் முத்திரைச் சின்னம்

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசாயி கோயில் கோபுரத் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:14 pm

ஜெயகுமார்

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசாயி கோயில் கோபுரத் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.

தமிழ்நாடு அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.

2000-ம் ஆண்டில் இக் கோபுரத்திற்கு இறுதியாக திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இக் கோயில்களின் திருப்பணிகள் தொடங்கியது. இங்குள்ள உள்ள பெரியாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி கோயில்களில் தங்க கொடி மரம் அமைக்கும் பணி மற்றும் கோபுரம் புனரமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2014 ஜனவரி மாதத்தில் இக் கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோயில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை கூறியதாவது: இக் கோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளதால், கோபுரத் திருப்பணிக்கு ரூ.45 லட்சம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25 லட்சம் வரவேண்டியுள்ளது. கோபுரத்தை கிடுகு தட்டி கொண்டு மறைத்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. தற்போது கோயில் பாதுகாப்பு காரணங்களுக்காக கோபுரத்தை மறைத்துள்ள தட்டிகளை எடுக்கக் கூறிவிட்டார்கள். அதனால் கிடுகு தட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வர்ணம் பூச அமைக்கப்பட்ட சாரம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. கோபுரத்தின் கீழ் தட்டுப் பகுதியில் வேலைகள் உள்ளது. முதலில் இக் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பின்னர் ஸ்ரீஆண்டாள் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.