புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேரளத்தைச் சேர்ந்த நக்சல் அமைப்பு மிரட்டல்? கூடங்குளம் அணு உலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கூடங்குளம் அணு உலையை தகர்க்கப்போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு

News image
Updated On :16 அக்டோபர் 2013, 11:01 am

முருகன்

கூடங்குளம் அணு உலையை தகர்க்கப்போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டு முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேரளத்தைச் சேர்ந்த நக்சல் அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் தமிழக் காவல்துறையை கேரள உளவுப் போலீஸார் உஷார்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரளத்தைச் சேர்ந்த நக்சல் அமைப்பு விடுத்திருந்த மிரட்டலில் கூடங்குளம் அணு உலையை அக்.16, 17ஆம் தேதிதிகளில் தகர்க்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்ததாம். இதையடுத்து கூடங்குளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.