ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ராமேஸ்வரம் அடுத்த ராமநாதபுரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கு பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று காலை பாக் ஜலசந்தி தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற ஐஎன் 481 ரக ஹெலிகாப்டரில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தனுஷ்கோடி அருகே அரிச்சல் முனையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக ஹெலிகாப்டரின் விமானி, துணை விமானி உட்பட 3 பேர் உயிர் தப்பினர். உடனடியாக உச்சிப்புளியில் உள்ள கடற்படை முகாமுக்கு தகவல் தெரிவக்கப்பட்டு பொறியாளர்கள் விரைந்து வந்து ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

