இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வத்திராயிருப்பில் முத்தாலாம்மன் 61-வது கலை விழா: கோலாகலம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, முத்தலாம்மன் 61-வது கலை விழா இம் மாதம் 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி (புதன்கிழமை) முடிய நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:17 pm

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, முத்தலாம்மன் 61-வது கலை விழா இம் மாதம் 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி (புதன்கிழமை) முடிய நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பில் சகல சமூகத்தினரும் சேர்ந்து ஒருமனதுடன் மழையை வேண்டி வழிபடுகின்ற கிராம தேவதையான முத்தாலம்மன் திருவிழா, பண்பட்ட கலை விழாவாக, கிராம மக்களின் ஒற்றுமையையும், மனப்பக்குவத்தையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருமைப்பாட்டு உணர்வுடன் ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மன் பக்த சபை சார்பில் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு இம் மாதம் 9-ம் தேதி மாலை தமிழ்நாடு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. சாதி மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவுகள் முத்தாலம்மன் திடலில் நடைபெற்றது.

புதன்கிழமை காலை அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் நடைபெற்று தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியே வந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்று அன்னதான அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.