விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆசிரியர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு, பல்லூடகப் பாதுகாப்பு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் தொடக்க நிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2013, 11:52 am

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் தொடக்க நிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சர்வதேச மனப்பான்மையை வளர்த்து உலகக் குடிமகனாக்குதல். நன்னெறி முறையில் வாழும் திறன் வளர்த்தல். ஜனநாயகப் பண்புள்ள குடிமக்களை உருவாக்குதல். இயற்கை வளங்களைப் பாதுகாத்தல். சமூக வாழ்வியல் திறன் வளர்த்தல். நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் வளர்த்தல். குழந்தைகளின் உரிமைகள். தொலைக்காட்சி, கைபேசி, இணையம் உள்ளிட்ட பல்லூடகங்களினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 103 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக கண்ணன், மீனலோசினி, ஜெயலட்சுமி ஆகிய ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.