தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் புதுச்சத்திரம் இருதரப்பினரிடம் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக பாமக தரப்பில் பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் செல்வபிரதீஷ் (26), ஹரிராஜபுரத்தைச் சேர்ந்த அன்பு (25), கலைமணி (19), துளசிராஜன் (21), அத்தியாநல்லூரைச் சேர்ந்த குருமூர்த்தி (20), அருண்மொழிதேவனைச் சேர்ந்த சிவா (19), சண்முகம் (18), சில்லாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26), கொத்தட்டையைச் சேர்ந்த 9 பேரையும், பாமக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக அத்தியாநல்லூரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் (32), சுப்பிரமணி (41),தேவநாதன் (25), சுரேஷ்குமார் (27), இளையராஜா (33), விநாயகமூர்த்தி (18), வடிவேல் (38) ஆகிய 7 பேரையுல் புதுசத்திரம் போலீஸார் கைது செய்தனர்.