இதுகுறித்து அக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: சிதம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதை ஒட்டி இந்து ஆலய பாதுகாப்புககுழு முதல்வரின் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழு வெற்றி பெற நகரில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் ஓமக்குளம் 90 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் தனிப்பிரிவு அனுமதியுடன் தூர்வாரப்பட்டு, தற்போது 30 லட்சம் கனஅடி நீர் சேமிக்கும் நிலையில் உள்ளது. ஓமக்குளத்தில் நீரை சேமிப்பது தொடர்பாக சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரையும், உதவி செயற் பொறியாளரையும் வலியுறுத்தி வருகிறோம். தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், பொன்னேரியிலிருந்து ஓமக்குளம் வரை 4 கி.மீ்டர் உள்ள வாய்ககாலை சீரமைத்து தரும்படி பொதுப்பணித்துறையினரிடம் தெரிவித்தார்.