தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஏற்காடு சட்டப்பேரவை இடைதேர்தல்: அதிமுகவிற்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு

ஏற்காடு சட்டப்பேரவை இடைதேர்தலில் அதிமுகவிற்கு ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 அக்டோபர் 2013, 12:12 pm

ஜி.சுந்தரராஜன்

ஏற்காடு சட்டப்பேரவை இடைதேர்தலில் அதிமுகவிற்கு ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு தமிழகத்தில் 50 சதவீத ஒதுக்கீடு அளித்து, இன்றளவும் பெரியாரினுடைய வகுப்புவாரியான இடஒதுக்கீடு கொள்கையை தமிழக மண்ணில் தொடர்ந்து நிலை நாட்டிவரும் பெரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். எனவே சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாநில பொதுக்குழுவில் ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வீடு, வீடாக சென்று பிரசாகம் செய்வது என முடிவு செய்துள்ளோம் என வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.